2012-01-07 13:53:10

சிலே நாட்டில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தலத்திருஅவை உதவி


சன.07,2012. தென் அமெரிக்க நாடான சிலேயில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கென தலத்திருஅவை எடுத்து வரும் நடவடிக்கைகளில் கத்தோலிக்கர் பங்கு கொள்ளுமாறு அந்நாட்டு ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிலே நாட்டின் தெற்குப் பகுதியில் பியோபியோ மாநிலத்தில் சுமார் 62 ஆயிரம் ஏக்கர் காடுகள் தீப்பற்றி எரிந்தன. இதில் 160 வீடுகள் அழிந்தன மற்றும் 600க்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர். மேலும், Maule மாநிலத்தில் சுமார் 16 ஆயிரம் ஏக்கர் காடுகளும் 30க்கும் மேற்பட்ட வீடுகளும் தீயில் அழிந்தன. இதில் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வீடுகள் இன்றி உள்ளன.
இந்தப் புதிய ஆண்டை இத்தகைய துன்பத்தோடு தொடங்கியுள்ள இம்மக்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டியிருக்கின்றது என்று சிலே ஆயர்கள் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.