2012-01-06 15:12:52

திருத்தந்தை : திருஅவை உலகுக்கு கிறிஸ்துவின் ஒளியை வழங்குகிறது


டிச.06,2012. இப்பெருவிழா நாளில் நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, நம் ஆண்டவர் உலகுக்குத் தம்மை வெளிப்படுத்திய திருக்காட்சிப் பெருவிழாவாகிய இந்நாளில் நாம் பெற்ற விசுவாசத்திற்கு நன்றி செலுத்துவோம் என்று கூறினார்.
உலகளாவியத் திருஅவையின் திருப்பணிக்கு, விசுவாசிகள் தங்களது சொல்லாலும் செயலாலும் சாட்சிய வாழ்வு வாழுமாறும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
இந்த உலகத்தில் அத்தனை வளங்கள் இருந்த போதிலும் அது, மனித சமுதாயத்தை வழிநடத்தக்கூடிய ஒளியைக் கொடுப்பதற்கு இயலாமல் இருக்கின்றது, ஆயினும், திருஅவை இறைவார்த்தை வழியாக நற்செய்தி ஒளியை ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் கொடுக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.








All the contents on this site are copyrighted ©.