தொமினிக்கன்குடியரசு நாட்டில் மதிப்புள்ள வகையில் தேர்தலை நடத்தி முடிக்குமாறு
கர்தினால் Rodriguez அழைப்பு
சன.05,2012. தென் அமெரிக்காவின் தொமினிக்கன் குடியரசு நாட்டில் இவ்வாண்டு மேமாதம் நிகழவிருக்கும்
அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வன்முறைகளைக் களைந்து, மதிப்புள்ள
வகையில் தேர்தலை நடத்தி முடிக்குமாறு அந்நாட்டு கர்தினால் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். புத்தாண்டையொட்டி
Santo Domingo பேராலயத்தில், நாட்டின் துணை அரசுத்தலைவர், மற்றும் பிற நாட்டுத் தூதர்கள்
கலந்து கொண்ட திருப்பலியில் புத்தாண்டு சிறப்புச் செய்தியை வழங்கிய அம்மறைமாவட்டத்தின்
பேராயரான கர்தினால் Nicolas de Jesus Lopez Rodriguez, மேமாதம் 20ம் தேதி நடைபெறவிருக்கும்
அரசுத்தலைவர் தேர்தல் பற்றி குறிப்பிட்டுப் பேசினார். தொமினிக்கன் குடியரசு நாட்டில்
அண்மைக்காலங்களில் பெருகிவரும் வன்முறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய கர்தினால் Rodriguez,
இவ்வன்முறைகள் குடும்பங்களில் பெண்களுக்கு பெருமளவில் இழைக்கப்படுகிறதென்றும், பொதுவாழ்வில்
வன்முறைகளின் ஒரு முக்கிய காரணம் போதைப் பொருள் வர்த்தகம் என்றும் சுட்டிக் காட்டினார்.