சன.05,2012. அன்பர்களே, தமிழகத்தின் கூடங்குளம் அணுஉலை இயங்குவதற்கு மக்கள் பெருமளவில்
எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணங்களை முனைவர் எக்ஸ்.டி.செல்வராஜ் அவர்கள் கடந்த ஆண்டில்
வத்திக்கான் வானொலிக்குத் தொலைபேசி வழியாக விளக்கினார். அதைத் தொடர்ந்து அந்த அணுஉலை
விவகாரம் எந்த நிலைமையில் இன்று இருக்கின்றது என்பதை அறிய மீண்டும் தொலைபேசியில் முனைவர்
எக்ஸ்.டி.செல்வராஜ் அவர்களை அழைத்தோம். இவர் ஒரு மனித உரிமை ஆர்வலர் மற்றும் சமூகப் பகுப்பாய்வாளர்.