சன.04,2012. சனவரி 4ம் தேதி, இப்புதனன்று மியான்மாரில் நடைபெற்ற சுதந்திர தினத்தை முன்னிட்டு
அந்நாட்டின் புதிய அரசு சில கைதிகளை விடுதலை செய்துள்ளது. கருணை அடிப்படையில் சில
கைதிகளின் தண்டனைக் காலம் குறைக்கப்படும் என்றும், மரணதண்டனை பெற்றோரின் தண்டனை ஆயுள்
தண்டனையாக மாற்றப்படும் என்றும் அரசால் நடத்தப்படும் ஊடகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆனால், இந்த அறவிப்பால் எத்தனை அரசியல் கைதிகள் பயன்பெறுவார்கள் என்பது தெளிவாக்கப்படவில்லை. சில
அரசியல் கைதிகளும் இன்று விடுதலை செய்யப்படுவார்கள் என்று பிபிசி நிறவனத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்த
போதிலும், முக்கியமான அரசியல் கைதிகள் எவரது பெயரும் பட்டியலில் இடம்பெறவில்லை என்று
பிபிசி அறிவித்துள்ளது. மியான்மாரின் மனித உரிமை நிலவரங்கள் மோசமாக இருப்பதாகக் கூறி
அதனைத் தடை செய்துள்ள பல மேற்கத்திய நாடுகள், அதற்கான காரணங்களில் முக்கியமானதாக அரசியல்
கைதிகளின் விவகாரத்தையும் வலியுறுத்தி வருகின்றன.