திருப்பீடச் சமூகத்தொடர்பு அவைக்கு, உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்களாக இரண்டு இந்தியர்கள்
நியமனம்
டிச.30,2011. இரண்டு இந்தியர்கள் உட்பட 9 புதிய உறுப்பினர்கள் மற்றும் 10 ஆலோசகர்களைத்
திருப்பீடத்தின் சமூகத்தொடர்பு அவைக்கு இவ்வியாழனன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம்
பெனடிக்ட். மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், குரோவேஷிய கர்தினால் யோசிப்
போஷானிச், திருப்பீடத்தின் புதிய நற்செய்தி அறிவிப்பு அவையின் தலைவர் பேராயர் சால்வாத்தோரே
ஃபிசிக்கெல்லா உட்பட 9 பேரை உறுப்பினர்களாகத் திருப்பீடத்தின் சமூகத்தொடர்பு அவைக்கு
நியமித்துள்ளார் திருத்தந்தை. உரோம் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தின் சமூகத்தொடர்புத்துறை
இயக்குனர் இயேசு சபை அருள்தந்தை அகுஸ்தீன் சவரிமுத்து உட்பட இரண்டு குருக்கள், ஓர் அருட்சகோதரி,
5 ஆண்கள், 2 பெண்கள் என 10 பேரை ஆலோசகர்களாகவும் அந்த அவைக்கு நியமித்துள்ளார் திருத்தந்தை. தமிழகத்தைச்
சேர்ந்த இயேசு சபை அருள்தந்தை முனைவர் அகுஸ்தீன் சவரிமுத்து, பாப்பிறைப் பல்கலைக்கழகத்தின்
சமூகத்தொடர்புத்துறையில் பேராசிரியராகப் பணியைத் தொடங்கி, தற்போது அத்துறையின் இயக்குனராகப்
பணியாற்றி வருகிறார்.