குடும்பங்களின் உரிமைகள் மதிக்கப்படுவதை வலியுறுத்தி மத்ரித்தில் பேரணி
டிச.30,2011. திருக்குடும்பத் திருவிழாவாகிய டிசம்பர் 30ம் தேதி இஸ்பெயின் மத்ரித்தில்
பல ஆயர்கள், குருக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் குடும்பங்களின் உரிமைகள் மதிக்கப்படுவதற்காக
பேரணி ஒன்றை நடத்தினர். குழந்தைப் பிறப்புக்களை ஊக்குவிக்கவும் குடும்ப வாழ்வைப் பாதுகாக்கவும்
குடும்பங்களின் உரிமைகள் மதிக்கப்படவும் இப்பேரணியில் வலியுறுத்தப்பட்டது. இக்காலத்திய
சமுதாயம் பொருளாதாரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், குடும்ப விழுமியங்களிலும் கவனம்
செலுத்த வேண்டுமென்று இஸ்பெயின் ஆயர் ஹூவான் ஹோசே ஒமெல்லா கூறினார்.