2011-12-27 13:32:47

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பங்களாதேசில் மதங்களிடையெயான உறவுகளுக்கு பெருமளவில் உதவியுள்ளன


டிச.27,2011. மதங்களிடையே பேச்சுவார்த்தைகளையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கும் நோக்கில் பங்களாதேசின் சிட்டகாங் ஆயர் மோசஸ் கோஸ்டா, அந்நகர் மேயர் மற்றும் பல்மதப் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடினார்.
பங்களாதேசில் கிறிஸ்தவர்களுக்கும் ஏனைய மதத்தலைவர்களுக்கும் இடையே உறவை ஊக்குவிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி உழைத்து வரும் ஆயர் கோஸ்டா, சிட்டகாங் பகுதியில் மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டு வருவது குறித்த மகிழ்ச்சியையும் வெளியிட்டார்.
பல்மத பிரதிநிதிகளுடன் ஆயர் கோஸ்டா ஏற்பாடு செய்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட சிட்டகாங் மேயர் Monjurul Alam பேசுகையில், அமைதியை விரும்பும் கிறிஸ்தவர்கள் தங்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை எப்போதும் அனைத்து சமூக மக்களுடனும் இணைந்து கொண்டாட முயல்வது அவர்களின் பரந்த மனப்பான்மையின் அடையாளம் என்றார்.
இதே விழாக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமிய மதக்குரு Moulana Iqbal Yousuf, கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பங்களாதேசில் மதங்களிடையேயான உறவுகளுக்கு பெருமளவில் உதவியுள்ளன என்றார்.








All the contents on this site are copyrighted ©.