2011-12-27 13:28:41

இத்தாலியில் மாஃபியா கும்பலுக்கு எதிராகப் போராடிவரும் குரு நடத்திவரும் மையம் முன்பு வெடிகுண்டு தாக்குதல்


டிச.27,2011. இத்தாலியில் மாஃபியா கும்பலுக்கு எதிராகப் போராடிவரும் குரு ஒருவரால் இளங்குடியேற்றதாரர்களுக்கு என நடத்தப்பட்டுவரும் மையத்தின் முன்புறம் வெடிகுண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தென் இத்தாலியின் கலாபிரியா பகுதியில் இடம்பெற்ற இக்குண்டு வெடிப்பால் எவருக்கும் காயம் இல்லையெனவும், மாஃபியா குற்றக்கும்பலுக்கு எதிராகப் போராடிவரும் குரு Giacomo Panizzaவை அச்சுறுத்த, அக்குற்றக்கும்பலால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் ANSA செய்தி நிறுவனம் கருத்து தெரிவிக்கிறது.
இக்குண்டுவெடிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த அருள் Panizza, இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகள் மூலம் குற்றக்கும்பல்களுக்கு எதிரான தன் போராட்டத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.








All the contents on this site are copyrighted ©.