பெத்லகேம் பகுதியில் வீடுகளையும்நிலங்களையும் இழக்கும் குடும்பங்கள்
மீது பேராயர் நிக்கோல்ஸ் கவலை
டிச.26,2011. புனித பூமியின் பெத்லகேம் பகுதியில் பிரிவுச் சுவர் ஒன்றைக் கட்டும் இஸ்ராயேலின்
பணிகள் முடியும் இத்தறுவாயில், அங்கே தங்கள் வீடுகளையும், நிலங்களையும் இழந்து வெளியே
தள்ளப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ள 50 குடும்பங்களைக் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்
இங்கிலாந்தின் Westminster பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ். உலகில் இன்று பல கோடி மக்களின்
வாழ்வில் பாதுகாப்பற்ற நிலைகளும், கவலைகளும் ஆக்ரமித்துள்ளதைக் காணும் நாம், இதற்குக்
காரணமான பேராசை, கொடும் எண்ணம், சுயநலம், மனித வாழ்வின் மீது மதிப்பற்ற நிலை போன்றவைகளை
முதலில் நோக்கி, அவைகளைச் சரிசெய்ய முன் வர வேண்டும் என்று பேராயர் நிக்கோல்ஸ் கிறிஸ்மஸ்
பெருவிழாத் திருப்பலியில் மறையுரை யாற்றிய வேளையில், பெத்லகேமின் இன்றைய நிலை குறித்தும்
பேசினார். பெத்லகேமின் Beit Jala பங்குதள மக்கள் 50 பேர் இஸ்ராயேல் அரசின் நடவடிக்கைகளால்
தங்கள் நிலங்களையும், வீடுகளையும் இழக்கும் சூழல் உருவாகியுள்ளது எனவும், அவர்களுக்காக
கத்தோலிக்க சமுதாயம் செபிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் பேராயர் நிக்கோல்ஸ்.