அனைத்து மதத்தவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்குமாறு புனே ஆயர் அழைப்பு
டிச.23, 2011. அனைத்து மதத்தவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்து மனித மாண்பு
பாதுகாக்கப்படுவதற்கு உழைக்குமாறு புனே ஆயர் தாமஸ் தாப்ரே கூறினார். புனேயில் நடைபெற்ற
பல்சமயக் கூட்டத்தில் உரையாற்றிய ஆயர் தாப்ரே, ஊழலும் வறுமையும் ஒழிக்கப்படுவதற்கு அனைத்து
மதத்தவரும் உழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். “அமைதிக்கு மதங்கள்” என்ற தலைப்பில்
நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய முஸ்லீம் தலைவர் Phiroz Poonawalla, அமைதி என்று பொருள்படும்
இசுலாம் மதம், ஒருவர் கடவுளிடம் தன்னை அர்ப்பணிக்கவும், உடன் வாழ்வோருக்குச் சேவை செய்யவும்
தூண்டுகிறது என்று கூறினார். ஆயினும், வன்முறையில் ஈடுபடும் சிலரின் தவறான போக்குகளால்
அனைத்து முஸ்லீம்களும் வன்முறையாளர்கள் எனத் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறார்கள் என்று
Poonawalla கவலை தெரிவித்தார்.