2011-12-22 15:11:56

பரோடா மறைமாவாட்டத்தின் முன்னாள் ஆயர் இறையடி சேர்ந்தார்


டிச.22,2011. பரோடா மறைமாவாட்டத்தின் முன்னாள் ஆயர் பிரான்சிஸ் பிரகான்சா இப்புதன் காலை இறையடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். ஆயர் பிரான்சிஸ் பிரகான்சாவின் அடக்கச் சடங்குகள் இவ்வியாழன் மாலை பரோடா பேராலயத்தில் நடைபெற்றன.
1922ம் ஆண்டு மும்பையில் பிறந்த ஆயர் பிரகான்சா, இயேசு சபையில் இணைந்து, 1951ம் ஆண்டு குருவாகவும், 1987ம் ஆண்டு ஆயராகவும் திருநிலைப் படுத்தப்பட்டார். பத்தாண்டுகள் ஆயராகப் பணிபுரிந்த இவர், 1997ம் ஆண்டு தன் 75 வயதில் ஒய்வு பெற்றார்.








All the contents on this site are copyrighted ©.