கிறிஸ்மஸ் காலம் அமைதியாகச் செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது - தெற்கு சூடான் ஆயர்
டிச.21,2011. கிறிஸ்மஸ் காலம் அமைதியாகச் செல்லும் என்ற நம்பிக்கை இருந்தாலும், Lord's
Resistance Army (LRA) என்ற ஒரு கொரில்லா அமைப்பினரால் துன்பங்கள் வரும் ஆபத்து உண்டு
என்று தெற்கு சூடான் ஆயர் ஒருவர் கூறினார். தெற்கு சூடான் பகுதியில் பல ஆண்டுகளாக
இயங்கி வரும் LRA என்ற கொரில்லா அமைப்பினால் கடந்த இரு மாதங்கள் எவ்விதத் தாக்குதலும்
இல்லையெனினும், இவர்களது தாக்குதல்கள் எந்நேரத்திலும் நிகழலாம் என்று தெற்கு சூடான் ஆயர்
Edaward Hiiboro Kussala, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார். இவ்வாண்டு ஜூலை மாதம்
முதல் தனிப்பட்ட ஒரு நாடாக இயங்கி வரும் தெற்கு சூடான் பகுதியில் பல கொரில்லா அமைப்புக்கள்
உள்ளன என்றும், இவர்களிடையே அடிக்கடி உருவாகும் மோதல்களினால் இத்திங்களன்று ஒரு குழுவின்
தலைவராக இருந்த George Athor கொல்லப்பட்டுள்ளார் என்றும் Fides செய்திக் குறிப்பொன்று
கூறுகிறது.