டிச.20,2011. இந்தியாவில் ஐம்பது இலட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர் என்று மத்திய
தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே லோக்சபாவில் அறிவித்தார். 2001ம் ஆண்டின்
கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும், ஒரு கோடியே 26 இலட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தனர்
எனவும், கடந்த ஆண்டு இது 49 இலட்சத்து 84 ஆயிரமாக குறைந்துள்ளது எனவும் கூறினார் அவர்.
இந்த எண்ணிக்கையைக் குறைக்கவும், அவர்களுக்கான பள்ளிகளை நடத்தவும், தொண்டு நிறுவனங்களுக்கு
அரசு நிதியுதவி செய்யவும், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மத்திய அரசு 40 ஆயிரம் கோடி
ரூபாய் ஒதுக்கியுள்ளது என மேலும் எடுத்துரைத்தார் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன
கார்கே.