2011-12-19 15:50:30

கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட உதவ முன்வந்துள்ளார் பங்களாதேஷ் பிரதமர்


டிச.19,2011. பங்களாதேசின் டாக்கா பேராயர் பேட்ரிக் டி ரொசாரியோ, அந்நாட்டு பிரதமரைச் சந்தித்து, கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டதோடு, அரசுக்கும் தலத்திருச்சபைக்கும் இடையேயான ஒன்றிணைந்த பணிகள் குறித்தும் கலந்துரையாடினார்.
தலத்திருச்சபை பிரதிநிதிகள் குழுவுடன் சென்று பிரதமர் Sheikh Hasinaவைச் சந்தித்த பேராயர் டி ரொசாரியோ, மதங்களிடையே கலந்துரையாடல், ஏழ்மை அகற்றல் மற்றும் அடைப்படைக் கல்வியின் அவசியம் குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
பங்களாதேசில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்குவதற்கு அரசின் உதவியையும் நாடினார் பேராயர் டி ரோசாரியோ.
கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதில் அரசின் உதவிக்கு உறுதிகூறிய பிரதமர், முழு மத விடுதலையை மதிப்பதில் தன் அரசு உறுதியாக இருப்பதாகவும், மதங்களிடையே கலந்துரையாடலை வளர்ப்பதில் தலத்திருச்சபை எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டுவதாகவும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.