2011-12-17 15:12:02

திருத்தந்தை, நியுசிலாந்து-பசிபிக் ஆயர்கள் சந்திப்பு


டிச.17,2011. உலகாயுதப் போக்கு அதிகமாகி வரும் சமூகங்களில், கிறிஸ்தவ விசுவாசத்தை உறுதியுடன் வாழ்வதற்குப் புதிய நற்செய்திஅறிவிப்புப் பணி உதவியாக இருக்கும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
நியுசிலாந்து மற்றும் பசிபிக் பகுதி ஆயர்களை, அட் லிமினா சந்திப்பையொட்டி இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, புதிய நற்செய்திஅறிவிப்புப் பணியை மனத்தில் வைத்தே விசுவாச ஆண்டு குறித்துத் தான் அண்மையில் அறிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
குருக்களின், சிறப்பாக, துன்பங்களை அனுபவிக்கின்ற மற்றும், பிற குருக்களுடன் சிறிதளவு தொடர்பைக் கொண்டுள்ள குருக்களின் புனித வாழ்க்கையில் அக்கறை காட்டுவது ஆயர்களின் முதன்மையான மேய்ப்புப்பணிக் கடமைகளில் ஒன்றாக இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.
புனித வாழ்வு நோக்கிக் குருக்களை வழிநடத்துவதில் ஆயர்கள் தந்தையைப் போல் இருந்து செயல்படுமாறும் அவர் பரிந்துரைத்தார்.
ஞானமும் புனிதமும் கொண்ட நல்ல குருக்கள், சிறந்த இறையழைத்தல் ஊக்குனர்கள் என்பதை நாம் அறிந்துள்ளோம் என்றும், இக்காலத்தில் இளையோர், நம் ஆண்டவரின் விருப்பத்தைத் தேர்ந்து தெளிவதற்கு, அவர்களுக்கு மிகுந்த உதவிகள் தேவைப்படுகின்றன என்றும் திருத்தந்தை தனது உரையில் தெரிவித்தார்.
நியுசிலாந்து மற்றும் பசிபிக் பகுதியில் நற்செய்தியை பரப்பும் பணியில் மறைபோதகர்களும் வேதியர்களும் அதிகமாக ஈடுபட்டுள்ளதால், ஆயர்கள் அவர்களைத் தொடர்ந்து உற்சாகப்படுத்துமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.