ஐ.நா.வின் அவசரகாலப் பணிகளுக்கு 375 மில்லியன் டாலர் உதவிக்கு நாடுகள் உறுதி
டிச.17,2011. பணக்கார நாடான நார்வே தொடங்கி, ஏழை நாடுகளான நைஜர், ஆப்கானிஸ்தான் உட்பட
45 க்கும் மேற்பட்ட நாடுகள், 37 கோடியே 50 இலட்சம் டாலர் அவசரகால நிதி உதவிக்கு உறுதியளித்துள்ளன
என்று ஐ.நா. அறிவித்தது. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா.ஒருங்கிணைப்பு அலுவலகம்
வெளியிட்ட அறிக்கையின்படி, 2012ம் ஆண்டின் ஐ.நா.வின் அவசரகாலப் பணிகளுக்கு நாடுகள் உறுதி
வழங்கியுள்ள இந்தத் தொகையானது, 2011ம் ஆண்டைவிட ஒரு கோடியே 60 இலட்சம் டாலர் அதிகம் என்று
தெரிய வந்துள்ளது. டென்மார்க் நாடு தனது நிதியுதவியை இரட்டிப்பாக்க உறுதி தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஐ.நா.வின் 126 உறுப்பு நாடுகளும் பார்வையாளர்களும் சுமார் 30 தனியாட்களும்
பொது அமைப்புகளும் கடந்த ஆறு ஆண்டுகளில் 280 கோடி டாலருக்கு அதிகமாக வழங்கியுள்ளன என்று
ஐ.நா.கூறியது.