2011-12-16 15:34:48

தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் கருக்கொலைகள்!


டிச.16,2011. தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் இருபதாயிரம் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டிருப்பதாக, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
இந்திய அளவில் 31 இலட்சம் பெண் கருக்கொலைகள் நடந்திருக்கலாம் எனவும் அக்கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது .
"பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசாரம்' என்ற தன்னார்வ நிறுவனம், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்களின் படி, தமிழகத்தில் திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், பெண் பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.