டிச.16,2011. தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் இருபதாயிரம் பெண் குழந்தைகள் கருவிலேயே
அழிக்கப்பட்டிருப்பதாக, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இந்திய
அளவில் 31 இலட்சம் பெண் கருக்கொலைகள் நடந்திருக்கலாம் எனவும் அக்கணக்கெடுப்பில் தெரிய
வந்துள்ளது . "பெண் கருக்கொலைக்கு எதிரான பிரசாரம்' என்ற தன்னார்வ நிறுவனம், தகவல்
பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்களின் படி, தமிழகத்தில் திருவண்ணாமலை, கடலூர்,
அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், பெண் பிறப்பு விகிதம் வெகுவாக
குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.