பிலிப்பின்ஸ் நாட்டில் கிறிஸ்மஸ் நவநாள் முயற்சிகள் ஆரம்பம்
டிச.15,2011. நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிகளை செபத்தின் வல்லமையால் மேற்கொள்ளலாம்
என்று பிலிப்பின்ஸ் நாட்டின் தலத்திருச்சபை அதிகாரிகள் கூறினர். இவ்வெள்ளியன்று பிலிப்பின்ஸ்
நாட்டில் கிறிஸ்மஸ் நவநாள் முயற்சிகள் ஆரம்பமாக உள்ளன. இந்த முயற்சிகளின் முதல் கட்டமாக
Simbang Gabi எனப்படும் முதல் திருப்பலி நிகழவிருப்பதையோட்டி, Lipa உயர்மறைமாவட்டத்தின்
பேராயர் Ramon Arguelles மக்களுக்கு விடுத்த அழைப்பில் இவ்வாறு எடுத்துரைத்தார். பிலிப்பின்ஸ்
நாட்டில் அண்மையில் நிகழ்ந்து வரும் பல்வேறு அரசியல் முடிவுகள் மக்களின் நலனை மையப்படுத்தியதாக
இல்லை என்று கூறிய Jaro உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Angel Lagdameo, Lipa பேராயரைப்
போலவே செபத்தின் வல்லமை குறித்து பேசினார். திருப்பலிகளில் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து
வருவதால், கிறிஸ்மஸ் விழா நவநாள் மற்றும் விழாக்கால திருப்பலிகள் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன
என்று Kidapawan மறைமாவட்ட ஆயர் Romulo Dela Cruz கூறினார்.