டிச.15,2011. அனைத்துலக மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ம் தேதிக்கு அடுத்து வரும் ஞாயிறு,
தலித் விடுதலை ஞாயிறாக இந்தியாவில் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி
இவ்வாண்டு இஞ்ஞாயிறு, இம்மாதம் 11ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபை
இஞ்ஞாயிறை எவ்வாறு சிறப்பித்தது என்று அறிவதற்காக இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்டோர்
ஆணைக்குழுவின் செயலர் அருட்பணி காஸ்மன் ஆரோக்யரஜ் அவர்களிடம் தொலைபேசியில் பேசினோம்.