2011-12-13 15:25:23

சொமாலியாவின் உதவித் திட்டங்களுக்கு 150 கோடி டாலர் நிதி உதவிக்கு ஐ.நா.வேண்டுகோள்


டிச.13,2011. கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட சொமாலியாவில் வாழ்வைப் பாதுகாப்பதற்கான நூற்றுக்கணக்கானத் திட்டங்களுக்காக 150 கோடி டாலர் நிதி உதவிக்கு ஐ.நா. விண்ணப்பித்துள்ளதாக ஐ.நா.மனிதாபிமான உயர் அதிகாரி ஒருவர் இச்செவ்வாயன்று கூறினார்.
சொமாலியாவில் கடந்த ஜூலையில் கடும் வறட்சி நிலை அறிவிக்கப்பட்ட பின்னர் அந்நாட்டில் இன்னும் சுமார் 40 இலட்சம் பேர் கடும் நெருக்கடி நிலைகளை எதிர்நோக்கியுள்ளனர் என்றும், இவர்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்க 2012ம் ஆண்டுக்கு இந்நிதியுதவி தேவை என்றும் ஐ.நா.அதிகாரி Mark Bowden கூறினார்.
சொமாலியாவில் கடும் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள 4 இலட்சத்து 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறாருக்கு ஐ.நா. உதவி வருகின்றது என்றும் அவர் கூறினார்.
மேலும், ஒவ்வொரு மாதமும் ஐ.நா.வின் உணவு உதவியைப் பெறும் மக்களின் எண்ணிக்கையும் மூன்று மடங்காகி இருப்பதாகவும் Mark Bowden கூறினார்.







All the contents on this site are copyrighted ©.