2011-12-09 15:15:01

ஐவரி கோஸ்டில் ஒவ்வொரு 36 மணி நேரங்களுக்கு ஒரு சிறார் வீதம் துன்பத்தை எதிர்நோக்குகின்றனர்


டிச.09,2011. ஐவரி கோஸ்ட் நாட்டில் ஒவ்வொரு 36 மணி நேரங்களுக்கு ஒரு குழந்தை வீதம் துன்பத்தை எதிர்நோக்குகின்றது என்று யூனிசெப் உள்ளிட்ட அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை கூறியது.
ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்டில் தேர்தலுக்குப் பின்னர் நெருக்கடிகள் இடம் பெற்ற ஓராண்டு கழித்து 1,121 பேர் வன்முறைக்குப் பலியாகியுள்ளனர் என்று அவ்வறிக்கை மேலும் கூறியது.
இந்த 1,121 பேரில் மூன்றில் இரண்டு பகுதியினர் சிறுமிகள் என்றும் இவர்களில் 60 விழுக்காட்டினர் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.