ஜலந்தர் மறைமாவட்டத்தில் புதிதாகத் துவக்கப்பட்டுள்ள கத்தோலிக்க செயற்கைக்கோள் தொலைக்காட்சி
டிச.08,2011. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மறைமாவட்டத்தில் கத்தோலிக்க செயற்கைக்கோள்
தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று புதிதாகத் துவக்கப்பட்டுள்ளது. புது டில்லிப் பேராயர்
வின்சென்ட் கொன்செஸ்ஸாவோ மற்றும் ஜலந்தர் ஆயர் அனில் ஜோசப் கூட்டோ ஆகிய இருவரும் இந்த
அலைவரிசை ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு ஆசீர் அளித்தனர். விரைவில் இந்த அலைவரிசை
தன் பணிகளைத் துவக்கும் என்றும், இத்தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழியாக இறைவனின் அன்பை
இந்திய மக்களும் பிறரும் கண்டுணரும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்றும் இந்த
அலைவரிசையின் இயக்குனர் அருள்தந்தை பேசில் கூறினார். Prarthana Bhawan என்று அழைக்கப்படும்
இந்தத் தொலைக்காட்சி நிலையத்தின் வழியாக அனைத்து இந்திய மொழிகளிலும் ஒளிபரப்பை மேற்கொள்ள
அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும், தற்போது இந்தி, பஞ்சாபி, மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில்
நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்றும் அருள்தந்தை பேசில் கூறினார்.