2011-12-07 16:01:37

குடியேற்றதாரர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள IOM எனப்படும் பன்னாட்டு அமைப்பில் திருப்பீடம் உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளது


டிச.07,2011. குடியேற்றதாரர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள ஒரு பன்னாட்டு அமைப்பில் திருப்பீடமும் ஒரு உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளது.
அனைத்துலகக் குடியேற்றதாரர் அமைப்பின் 100வது அவைக்கூட்டம் இத்திங்கள் மதல் புதன் முடிய ஜெனீவாவில் நடைபெற்றபோது இம்முடிவு அறிவிக்கப்பட்டது. இம்முடிவினை திருப்பீடம் மகிழ்வுடனும் நன்றியுடனும் ஏற்றுக் கொள்வதாக ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அவையில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி கூறினார்.
கடந்த 60 ஆண்டுகளாக International Organization for Migration (IOM) எனப்படும் குடியேற்றதாரர் அவை செய்துவரும் பணிகளைப் பாராட்டிப் பேசிய பேராயர் தொமாசி, இந்த அவை செய்து வரும் பணிகளுக்கு திருப்பீடமும் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்று உறுதி அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.