பிலிப்பின்ஸ் நாட்டில் அமல மரி தியாகிகள் துறவுச் சபையைச் சார்ந்த அருள்தந்தைக்கு விருது
டிச.06,2011. பிலிப்பின்ஸ் நாட்டில் தகவல் தொடர்புத் துறையில் தலை சிறந்த சேவையாற்றியதற்காக,
Ninoy மற்றும் Cory Aquino நினைவாக வழங்கப்படும் உயர்ந்ததொரு விருது அமல மரி தியாகிகள்
துறவுச் சபையைச் சார்ந்த அருள்தந்தை Eduardo C. Vasquez Jr. அவர்களுக்கு வழங்கப்பட்டது. இச்செவ்வாயன்று
பிலிப்பின்ஸ் நாட்டின் Makati நகரில் நடைபெற்ற ஒரு விழாவில் அருள்தந்தை Vasquez இவ்விருதினை
அரசுத் தலைவர் Benigno Aquinoவிடமிருந்து பெற்றுக் கொண்டார். அருள்தந்தை Vasquez 2006ம்
ஆண்டு முதல் தொடர்பு சாதனங்கள் மூலம் விழிப்புணர்வையும் மக்கள் சேவையையும் வழங்கும் i-Watch
என்ற ஓர் அமைப்பை நடத்தி வருகிறார். இவ்வமைப்பின் மூலம் ஏழை மக்களுக்குத் தொடர்புச்
சாதனங்களில் பயிற்சிகள் அளிப்பதையும், சமுதாய, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த
பிரச்சனைகளை மையப்படுத்திய ஊடகப் பதிவுகளை வெளியிடுவதையும் அருள்தந்தை Vasquez செய்து
வருகிறார். ஊடகப் பதிவுகள் வழியே இவர் காட்ட விழைந்த பிரச்சனைகள் இவரையும், இவரது
அமைப்பையும் பல நேரங்களில் ஆபத்தில் ஈடுபடுத்தினாலும், இவர் தளராமல் இந்தப் பணியைத் தொடர்ந்ததால்,
இவரது துணிவையும் ஈடுபாட்டையும் பாராட்டி அமெரிக்கத் தூதரகம் இந்த விருதை அருள்தந்தை
Vasquezக்கு வழங்கியுள்ளதென்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.