எருசலேம் ஆயர் - அமைதிக்குப் பணியாற்றும்போது இறைவன் மகிமைப்படுத்தப்படுகிறார்
டிச.06,2011. புனித பூமியின் பெத்லேகமில் உள்ள இயேசு பிறப்பு பசிலிக்காப் பேராலயமும்,
அமெரிக்க ஐக்கிய நாட்டின் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் மையமும் இணைந்து கிறிஸ்துமஸ்
பெருவிழாக் காலத்தின் அமைதி மற்றும் நம்பிக்கையின் செய்தியை வெளியிட்டுள்ளன. இச்செய்தியை
வெளியிட்ட எருசலேம் துணை ஆயர் வில்லியம் ஷொமாலி, 'உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக!
உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!' என இயேசு பிறப்பின்போது விண்ணகத்தூதர்
பேரணி இறைவனைப் புகழ்ந்து பாடியது தற்செயலாக நிகழ்ந்ததல்ல, ஏனெனில் இறைமாட்சி அமைதியோடு
தொடர்புடையது, அதேவேளை மனிதனின் அமைதி இறைமாட்சியோடு தொடர்புடையது என்றார். மத்திய
கிழக்குப் பகுதியில் அமைதிக்காக உழைப்பவர்களும், அங்குள்ள மக்களிடையே மன்னிப்பு மற்றும்
ஒப்புரவிற்காகப் பாடுபடுபவர்களும் தங்கள் நடவடிக்கைகள் மூலம் இறைவனை மகிமைப்படுத்துகின்றார்கள்
என அச்செய்தி மேலும் கூறுகிறது.