2011-12-06 15:26:48

உயிர்நுண்ம ஆயதங்களில் இருந்து உலகம் பாதுகாக்கப்பட Pax Christi அழைப்பு


டிச.06,2011. உலக உயிர்நுண்ம பாதுகாப்புத் தொடர்புடையவைகளில் உலகம் பொறுப்புடன் செயல்படவேண்டியதன் அவசியம் குறித்து அழைப்பு விடுத்துள்ளது அனைத்துலக Pax Christi அமைப்பு.
உயிர் நுண்ம ஆயதங்கள் குறித்த அனைத்துலக கருத்தரங்கில் தன் கருத்துக்களை இச்செவ்வாயன்று வெளியிட்ட இந்த அமைப்பின் பிரதிநிதி Trevor Griffiths, உலகின் அமைதி மற்றும் நீதிக்கும், குறிப்பாக உயிர் நுண்ம பாதுகாப்புக்கும் நல்மனதுடையோர் தங்களால் இயன்ற அனைத்தையும் ஆற்றவேண்டும் என விண்ணப்பித்தார்.
உயிர்நுண்ம ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது அது நோய்களைப் பரப்பி மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிப்பது மட்டுமல்ல, கால்நடைகளையும் உணவு உற்பத்தியையும் கூட பாதிக்கின்றது என்ற நிலையில், இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது சர்வதேச சமூகத்தின் கடமையாகின்றது என மேலும் கூறினார் Griffiths.
உயிர்நுண்ம ஆயுதங்கள் குறித்த கருத்தரங்கு ஜெனீவாவின் ஐ.நா. அமைப்பில் இம்மாதம் ஐந்தாம் தேதி முதல் 22ம் தேதி வரை இடம்பெறுகிறது.








All the contents on this site are copyrighted ©.