2011-12-05 14:47:37

இங்கிலாந்தில் குடும்பங்கள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டியதன் தேவையை அண்மை ஆய்வு வலியுறுத்துகிறது


டிச.05,2011. திருமணம் பரியாமல், சேர்ந்து வாழ்வோரின் எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகரித்துள்ளதால், குடும்பம் என்ற அமைப்பு மேலும் பலப்படுத்தப்பட வேண்டியதன் தேவை உள்ளது என அண்மையில் அந்நாட்டில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று வலியுறுத்துகிறது.
இங்கிலாந்தின் கிறிஸ்தவ மறுமலர்ச்சி அமைப்பு ஒன்றால் அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, அந்நாட்டில் வயதுக்கு வந்தோருள் ஆறுபேருக்கு ஒருவர் திருமணமின்றியே சேர்ந்து வாழ்வதாகத் தெரிய வந்துள்ளது. திருமணமாகமலேயே ஒன்றிணைந்திருப்போரின் வாழ்வு பெரும்பாலும் திருமணத்தில் முடிவதில்லை, மாறாக பிரிதலிலேயே முடிகிறது என இந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தின் 14,103 வீடுகளிலும் 22,265 பேரிடமும் நடத்தப்பட்ட ஆய்வுகளிலிருந்து இது தெரிய வந்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.