பாகிஸ்தான் நாட்டில் கிறிஸ்தவர்கள் இரண்டாம்தர குடிமக்கள் போல் நடத்தப்படுகின்றனர்
டிச.03,2011. பாகிஸ்தான் நாட்டில் கிறிஸ்தவர்கள் இரண்டாம்தர குடிமக்கள் போல் நடத்தப்படுவதாக
தன் கவலையை வெளியிட்டுள்ளார் ஜெர்மன் நாட்டு ஆயர் பேரவையின் அதிகாரி பேராயர் Ludwig Schick
. பாகிஸ்தானில் தற்போது துன்பங்களையும் அடக்குமுறைகளையும் அனுபவித்து வரும் கிறிஸ்தவர்களோடு
நம் ஒருமைப்பாட்டை அறிவிப்போம் என்ற தலைப்பில் சிற்றேடு ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய
பாம்பெர்க் பேராயர், கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, இந்துக்கள், புத்தமதத்தினர் மற்றும் சில
சிறுபான்மை மதத்தவர் பாகிஸ்தானில் மதசகிப்பற்றதன்மைகள் மற்றும் வன்முறைகளால் துன்பங்களை
அனுபவித்து வருவதாக மேலும் கூறினார். பாகிஸ்தானின் தேவ நிந்தனைச் சட்டத்தால் அந்நாட்டு
கிறிஸ்தவர்கள் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்து வருவதாக பேராயர் Schick குறிப்பாகச் சுட்டிக்காட்டினார்.