2011-12-02 15:30:49

மெக்சிகோ நாட்டின் கலைஞர்கள் செய்து வரும் திரு உருவங்கள் வத்திக்கான் வளாகத்தில் வைக்கப்படும்


டிச.02,2011. புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி தொடர்பாக இவ்வாண்டு வைக்கப்படும் உருவச் சிலைகளை மெக்சிகோ நாட்டின் Puebla மாநிலக் கலைஞர்கள் செய்து வருகிறார்கள் என்று மெக்சிகோ நாளிதழில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
வத்திக்கான் வளாகத்தில் டிசம்பர் 13 நடைபெறும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியின்போது மெக்சிகோ கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைகளை Puebla மறைமாவட்டத் துணை ஆயர் Eugenio Lira Rugarcia திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாளையொட்டி, திருத்தந்தை ஆறாம் பால் மண்டபத்தில் Puebla மாநிலத்தின் கலைக் கருவூலங்களை விளக்கும் ஒரு கண்காட்சியும் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ பெருநகரம், Jalisco மற்றும் Guan பகுதிகளின் கலைஞர்கள் உருவாக்கிய திரு உருவச் சிலைகள் கடந்த சில ஆண்டுகளில் புனித பேதுரு வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.









All the contents on this site are copyrighted ©.