கொல்கத்தாவில் மிகப்பெரும் அளவில் நடைபெறவிருக்கும் கிறிஸ்மஸ் விழா
டிச.02,2011. டிசம்பர் மாதத்தில் கொல்கத்தாவில் இருநாட்கள் நடைபெறவிருக்கும் கிறிஸ்மஸ்
விழா மிகப்பெரும் அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் விழாவின் மைய எண்ணங்களான
அமைதியையும், மகிழ்வையும் அனைத்து மக்களும் பெற வேண்டும் என்பதே இவ்விழாவை ஏற்பாடு செய்வதன்
முக்கிய காரணம் என்று இவ்விழாக் குழுவின் தலைவர் கொல்கத்தா பேராயர் Thomas D'Souza கூறினார். முதலமைச்சர்
Mamata Banerjee அவர்களால் துவக்கி வைக்கப்பட விருக்கும் இந்த விழாவில் பிரபலப் பாடகர்
உஷா உதுப் உட்பட பல இசைக் கலைஞர்கள், இசைக் குழுவினர் மற்றும் பல்வேறு கிறிஸ்தவ சபைகளின்
பாடல் குழுவினர் இசை நிகழ்ச்சிகளை வழங்குவர். வங்காளம், மலையாளம், பாரசீகம், சீனா,
கோவா ஆகிய பகுதிகளின் உணவு வகைகள் இவ்விரு நாட்களிலும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கத்தோலிக்கத்
தலத்திருச்சபை, Methodist, Seventh Day Adventist, வடஇந்திய சபை ஆகிய பல கிறிஸ்தவ சபைகள்
ஒன்றிணைந்து நடத்தும் இந்த விழாவில் கொல்கத்தாவின் சேரிகளில் வாழும் பல குழந்தைகளுக்கு
பரிசுகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.