புருண்டி நாட்டில் அருள்சகோதரி ஒருவரும், சுயவிருப்பப்பணியாளர் ஒருவரும் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.
நவ.29,2011. புருண்டி நாட்டில் பணியாற்றி வந்த கத்தோலிக்க அருள்சகோதரி ஒருவரும், அவருடன்
இணைந்து பணியாற்றி வந்த சுயவிருப்பப்பணியாளர் ஒருவரும் இஞ்ஞாயிறு இரவு திருடர்களால் கொலை
செய்யப்பட்டுள்ளனர். குரவேசியா நாட்டைச் சேர்ந்த அருள்சகோதரி Lukrecija Mamica, அவருடன்
பணியாற்றி வந்த இத்தாலிய சுய விருப்பப்பணியாளர் Francesco Bazzani ஆகியோர் தங்கியிருந்த
இல்லத்திற்குள் இரவு புகுந்த திருடர்கள் இவர்களைக் கொலை செய்ததுடன், இத்தாலிய அருள்சகோதரி
Carla Brianzaவைப் படுகாயப்படுத்தியுள்ளனர். இவர்கள் மூவரும் பணியாற்றிக் கொண்டிருந்த
புருண்டியின் மேற்கு பகுதி மருத்துவ மனைக்கு அருகில் உள்ள இவர்களின் இல்லத்தில் புகுந்த
திருடர்கள், அருள்சகோதரிகள் மமிக்கா மற்றும் பிரியான்சா ஆகியோரைத் துப்பாக்கியால் சுட்டதில்
மமிக்கா உடனடியாக மரணமடைந்தார். இத்தாலிய சுயவிருப்பப்பணியாளர் Bazzaniயைக் கடத்த முயன்றபோது
இடம்பெற்றப் போராட்டத்தில் அவரும் கொல்லப்பட்டார்.