பங்களாதேசின் ஏழைக் குழந்தைகளுக்கு அடிப்படைக்கல்வி வழங்கும் காரித்தாஸின் திட்டத்திற்கு
ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் உதவி
நவ.29,2011. பங்களாதேஷ் நாட்டில் ஏழைக்குழந்தைகளுக்கு அடிப்படைக்கல்வி வழங்கும் திட்டத்திற்கு
நிதி உதவி வழங்க உள்ளதாக அந்நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்புடன் ஒப்பந்தம் ஒன்றில்
கையெழுத்திட்டுள்ளது ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் அவை. ஒரு கோடியே 32 இலட்சம் டாலர்கள்
மதிப்பு கொண்ட இத்திட்டம் காரித்தாஸ் பணியாற்றும் ஆறு மாநிலங்களில் உள்ள ஏழைச்சிறார்களுக்கு
ஆறு ஆண்டு காலம் கல்வி வழங்க பயன்படுத்தப்படும். கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பின்
வழி செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒரு
இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.