2011-11-28 15:35:00

இலங்கையில் சிறையிலடைக்கப்பட்டுள்ள அருள் சகோதரியை அன்னை திரேசா சபை தலைவி சென்று சந்தித்தார்


நவ.28,2011. இலங்கை குழந்தைகளை வெளிநாட்டவர்க்கு விற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அன்னை திரேசா பிறரன்புக் கன்னியர் சபையைச் சேர்ந்த அருள் சகோதரி மேரி எலிசாவைச் சந்திக்க அந்நாட்டிற்கு வந்துள்ளார் அச்சபை தலைவி அருள் சகோதரி பிரேமா.
உலகம் முழுவதும் 5040 அருள் சகோதரிகளைக் கொண்டு 760 இல்லங்கள் மூலம் பணியாற்றி வரும் பிறரன்பு சபை சகோதரிகளுள் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவது உலகில் இதுவே முதன்முறையாகும்.
ஏழைகளிடையே பணியாற்றும் பிறரன்புச் சபை சகோதரி ஒருவர் கைதுச் செய்யப்படுள்ளது குறித்து கர்தினால் மால்கம் இரஞ்சித்தும் தன் ஆழ்ந்தக் கவலையை வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கான இந்திய ஹைகமிஷனர் அசோக் கந்தாவும் இந்திய தூதரக அதிகாரிகளை அனுப்பி உண்மை நிலையை விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வெலிக்கடா சிறையில் அடைக்கப்பட்ட இந்திய அருள் சகோதரி மேரி எலிசாவிற்கு வெளியிலிருந்து உணவு எடுத்துச் செல்லவும் சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.