திருச்சபையின் படிப்பினைகளைப் பறைச்சாற்றவேண்டிய கடமை ஒவ்வோர் ஆயருக்கும் உள்ளது
நவ.26,2011. நவீன சமூகத்திற்கு திருச்சபையின் படிப்பினைகளைப் பறைச்சாற்றவேண்டிய கடமை
ஒவ்வோர் ஆயருக்கும் உள்ளது என்றார் ஆயர்களுக்கான திருப்பேராயத் தலைவர் கர்தினால் Marc
Ouellet. இத்தாலிய தினத்தாள் L’Avvenireக்கு பேட்டியளித்த கர்தினால், ஓர் ஆயரிடம்
எதிர்பார்க்கப்படும் தனிப்பட்ட பண்புகளுடன் அவர்கள் சமூகத்தில் வெளிப்படையாக விசுவாசத்தைப்
பாதுகாக்க வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். ஒவ்வோர்
ஆயருக்கும் தாங்கள் யாருக்காக உழைக்கிறோம் என்பது தெரிந்திருக்க வேண்டும், அதாவது, இறைவனுக்கும்
திருச்சபைக்கும் உழைப்பது தெரிந்திருக்கவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புவதாக மேலும்
கூறினார் கர்தினால் Ouellet.