Iஇறைவாக்கினர் எசாயா 63: 16-17; 64:
1, 3-8 IIகொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்
1: 3-9
மாற்கு நற்செய்தி 13: 33-37 அக்காலத்தில்,
மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களிடம் கூறியது: “கவனமாயிருங்கள், விழிப்பாயிருங்கள்.
ஏனெனில் அந்நேரம் எப்போது வரும் என உங்களுக்குத் தெரியாது. நெடும்பயணம் செல்லவிருக்கும்
ஒருவர் தம் வீட்டைவிட்டு வெளியேறும்போது தம் பணியாளர் ஒவ்வொருவரையும் அவரவர் பணிக்குப்
பொறுப்பாளராக்கி, விழிப்பாயிருக்கும்படி வாயில் காவலருக்குக் கட்டளையிடுவார். அதுபோலவே
நீங்களும் விழிப்பாயிருங்கள். ஏனெனில் வீட்டுத் தலைவர் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும்
வேளையிலோ, காலையிலோ எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது. அவர் திடீரென்று வந்து
நீங்கள் தூங்குவதைக் காணக்கூடாது. நான் உங்களுக்குச் சொல்லுவதை எல்லாருக்குமே சொல்கிறேன்;
விழிப்பாயிருங்கள்.”