2011-11-26 15:09:06

இலங்கையில் நாளொன்றுக்கு 1000 கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன


நவ.26,2011. இலங்கையில் ஆண்டொன்றுக்கு மூன்று லட்சம் கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக தி ஐலன்ட் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
மக்களிடையே அறநெறி மதிப்பீடுகளுக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதே இதற்கு காரணம் என அப்பத்திரிகை மேலும் தெரிவிக்கிறது.
நாளொன்றிற்கு 1000 கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கருக்கலைப்புகளின் எண்ணிக்கை இதனை விட அதிகமாக இருக்கலாம் என்று இலங்கையின் நலத்துறை அமைச்சக அதிகாரியான பி.எம்.டி அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கருக்கலைப்புகளைத் தடுக்க சட்டங்கள் இயற்றப்படவுள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.