2011-11-24 14:41:31

போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களும், இராணுவமும், தேர்தல்கள் நல்ல முறையில் நடைபெற வேண்டியவற்றைச் செய்ய வேண்டும் - திருப்பீடத் தூதர் அழைப்பு


நவ.24,2011. ஜனநாயக முறையில் நடத்தப்படும் தேர்தல்கள் வழியே மக்கள் அளிக்கும் வாக்குகளே அவர்களது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யும் ஒரே வழி என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த சில நாட்களாய் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் நடைபெறும் போராட்டங்களையும், அவற்றை அடக்க இராணுவம் மேற்கொண்ட அடக்கு முறைகளையும் குறித்து தன் கருத்தைத் தெரிவித்த திருப்பீடத் தூதர் பேராயர் Michael Fitzgerald, MISNA செய்தி நிறுவனத்திற்கு இப்புதனன்று அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களும், இராணுவமும், அரசும் தங்கள் வன்முறைகள் அனைத்தையும் விடுத்து, தேர்தல்கள் விரைவில் நல்ல முறையில் நடைபெற வேண்டியவற்றைச் செய்ய வேண்டும் என்று பேராயர் Fitzgerald எடுத்துரைத்தார்.
கடந்த சில நாட்களாக இராணுவம் மேற்கொண்ட அடக்கு முறைகளால் மக்கள், முக்கியமாக இளையத் தலைமுறையினர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய திருப்பீடத் தூதர், விரைவில் தேர்தல்களை நடத்துவதற்கு இராணுவ அரசு முழு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.