ஊழலை எதிர்ப்பது விசுவாச வாழ்வின் ஒரு வெளிப்பாடு : தலத் திருச்சபை
ஆயர்கள்
நவ.23,2011. ஊழல் எவ்விதம் பல வழிகளில் இந்திய சமுதாயத்தில் பாதிப்புக்களை உருவாக்குகிறதோ
அவ்விதமே அது திருச்சபையையும் பாதிக்கிறது என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார். இந்தியாவில்
ஆக்ரா பகுதியில் உள்ள மறைமாவட்டங்கள் இணைந்து நடத்திய ஒரு கூட்டத்தில் ஊழலை எதிர்ப்பது
விசுவாச வாழ்வின் ஒரு வெளிப்பாடு என்று தலத் திருச்சபை ஆயர்கள் விவாதங்களை மேற்கொண்டபோது,
ஜெய்பூர் ஆயர் ஆஸ்வால்ட் லூயிஸ் இவ்விதம் கூறினார். இந்திய சமுதாயத்தில் ஊடுருவியிருக்கும்
ஊழல் இந்தியத் திருச்சபையிலும் காணப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டுகள் உள்ளன என்று
ஆயர் லூயிஸ் கூறினார். இந்திய சமுதாயத்தில் ஊழலை ஒழிக்கப் பாடுபடும் அனைத்து குழுக்களும்
தங்கள் குழுவினரிடையே இந்தப் பிரச்சனை உள்ளதா என்பதையும் தீர ஆராய வேண்டும் என்று வாரணாசி
ஆயர் Raphy Manjaly கூறினார். தலத்திருச்சபை ஆயர்களையும், சமுதாய நலனில் ஆர்வமுள்ள
பல குழுக்களையும் ஒருங்கிணைத்து இக்கூட்டத்தை வழி நடத்திய இயேசு சபை குரு செட்ரிக் பிரகாஷ்,
கிறிஸ்துவின் சீடராக இருப்பது நேர்மை, நீதி, ஒளிவு மறைவற்ற வாழ்வு இவைகளை உள்ளடக்கியதாக
இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.