பன்வலைத் தொடர்பு அமைப்புகள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்குமாறு வழி செய்யப்பட வேண்டும்
- இயேசு சபை இதழ்
நவ.18,2011. பன்வலைத் தொடர்பு அமைப்புகள் உலக மக்கள் அனைவருக்கும் நன்மை செய்வதால் அவை
எல்லாருக்கும் கிடைக்குமாறு வழி செய்யப்பட வேண்டும் மற்றும் மற்றவரின் மனித உரிமைகள்
மதிக்கப்பட வேண்டும் என்று இயேசு சபை இதழ் ஒன்று கேட்டுக் கொண்டது. அடக்குமுறை அரசுகள்
தகவல்கள் பெறும் வசதிகளையும் தொடர்புகள் பெறும் வசதிகளையும் கட்டுப்படுத்துவதால், இணையதளத்தைப்
பயன்படுத்துவது உலகளாவிய மனித உரிமைகள் என்பதை உறுதிப்படுத்தும் பொதுக் கொள்கைகளை சனநாயக
அரசுகள் கொண்டு வருமாறு La Civilta Cattolica என்ற இதழ் மேலும் கேட்டுக் கொண்டது. இம்மாதம்
24,25 தேதிகளில் ஐரோப்பிய அவை இணையதளம் குறித்த கருத்தரங்கை நடத்தவுள்ளது. இதையொட்டி
இவ்வாறு கேட்டுள்ளது அவ்விதழ்.