மியான்மாரில் மேலும் அதிகமான அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசு திட்டம்
நவ.15,2011. மியான்மாரில் சனநாயக ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சு கி, அடுத்து
நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கு முயற்சித்து வரும் வேளை, அந்நாட்டு அரசு மேலும்
அதிகமான அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குத் திட்டமிட்டுள்ளது என்று ஆசியச் செய்தி
நிறுவனம் கூறியது. கடந்த அக்டோபரில் சுமார் 200 மனச்சான்றின் கைதிகள் உட்பட ஆறாயிரத்துக்கு
அதிகமான கைதிகளை விடுதலை செய்த மியான்மார் அரசு, அரசியல் கைதிகள் உட்பட பல கைதிகளுக்குப்
பொது மன்னிப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மியான்மார் சிறைகளில்
1,600க்கு அதிகமான அரசியல் கைதிகள் உள்ளனர் என்று மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.
ஆனால் இவ்வெண்ணிக்கை சுமார் 500 என்று அரசு சார்பு தினத்தாள் கூறுகிறது. 2010ம் ஆண்டு
நவம்பர் 13ம் தேதி வீட்டுக் காவலிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சு கி, வருகிற தேர்தலில்
நிற்பதற்குத் திட்டமிட்டு வருவதாக அறிவித்துள்ளார்.