2011-11-12 15:00:34

கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஆயர் ஆதரவு : CCBI தகவல்


நவ.12,2011. தமிழ் நாட்டின் தூத்துக்குடி மறைமாவட்டக் குருக்கள் கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்புப் போராட்டங்களிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டுமென்று தான் கூறியதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு தூத்துக்குடி ஆயர் யுவான் அம்புரோஸ் அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார் என்று CCBI என்ற இந்திய இலத்தீன் ரீதி ஆயர்கள் அவையின் இணையதளம் அறிவித்தது.
இந்தப் போராட்டங்களுக்கு அருட்பணியாளர்களும் அருட்சகோதரிகளும் ஆதரவு தெரிவிக்குமாறும், அதேசமயம், இந்தப் போராட்டங்களுக்குப் பொதுநிலையினர் தலைமை ஏற்று நடத்துவதற்கு அருட்பணியாளர்களும் அருட்சகோதரிகளும் அவர்களை அனுமதிக்குமாறும் ஆயர் கூறியுள்ளதாகவும் கூறியுள்ளது இந்த இணையதளம்.
இரஷ்யத் தொழிற்நுட்பத்துடன் 300 கோடி டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் வருகிற டிசம்பர் மாதத்தில் செயல்படத் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் இரண்டாயிரம் மெஹாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.