2011-11-11 15:27:07

வத்திக்கான் அதிகாரி : கத்தோலிக்கத் திருச்சபை மதமாற்றங்களுக்காக வேலை செய்யவில்லை


நவ.11,2011. கத்தோலிக்கத் திருச்சபை மதமாற்றங்களுக்காக உழைக்கவில்லை, மாறாக நீதி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக, மதங்களிடையே உறவை ஆழப்படுத்தவே விரும்புகின்றது என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran கூறினார்.
இந்தியாவில் பத்து நாள்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள கர்தினால் Tauran, நாட்டில் முக்கிய மதங்களின் தலைவர்களைச் சந்தித்து வருகிறார்.
கத்தோலிக்கத் திருச்சபை, “கட்டாய அல்லது ஏமாற்று” வழிகளைப் பயன்படுத்தி மக்களை மதமாற்ற முயற்சிக்கிறது என்று சில இந்து குழுக்கள் குறை சொல்லி வருவதைத் தான் அறிந்தே இருப்பதாகவும் இக்குற்றச்சாட்டு உண்மையல்ல எனவும் கர்தினால் Tauran கூறினார்.








All the contents on this site are copyrighted ©.