திருத்தந்தை : தனிப்பட்ட மற்றும் குடும்பங்களின் மாண்புக்கு வேலைவாய்ப்பின்மை அச்சுறுத்தல்
நவ.11,2011. ஈக்குவதோர் நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் அந்தோணியோ யார்சாவுக்குத்
திருத்தந்தை அனுப்பிய கடிதத்தில், தனிப்பட்ட மற்றும் குடும்பங்களின் மாண்புக்கு வேலைவாய்ப்பின்மை
அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று கூறியுள்ளார். தென் அமெரிக்க நாடான ஈக்குவதோரில்
இப்புதனன்று தொடங்கிய இரண்டாவது தேசிய குடும்ப மாநாட்டிற்கென அனுப்பிய கடிதத்தில் இவ்வாறு
சொல்லியுள்ளார் திருத்தந்தை. மனிதன், வேலையின் வழியாக, கடவுளின் படைப்புத் திட்டத்தில்,
தான் பங்கு கொள்வதைப் பார்க்கத் தொடங்குகிறான் என்றுரைக்கும் அக்கடிதம், ஒவ்வொருவரும்
மாண்புடன் தரமான வேலைகளைச் செய்வதற்குத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுமாறு வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே,
ஐரோப்பிய சமுதாய அவை நாடுகளில் வேலைவாய்ப்பின்மை 9.7 விழுக்காடு அதிகரித்திருப்பதாக அண்மை
அறிக்கை ஒன்று கூறுகிறது.