அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களது திருப்பண்டம் சீனாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது
ஹாங்காங்கிற்கு நவ.10,2011. அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களது திருப்பண்டம்
ஹாங்காங்கிற்கு எடுத்துச் செல்லப்படவிருக்கின்றது என்று யூக்கா செய்தி நிறுவனம் அறிவித்தது. ஹாங்காங்
தலத்திருச்சபை இவ்வாரத்தில் பொதுநிலையினர் ஆண்டை நிறைவு செய்யும் நிகழ்வுகளின் ஒரு கட்டமாக
அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களது தலைமுடி ஹாங்காங்கிற்கு எடுத்துச் செல்லப்படவிருக்கின்றது
என்று அச்செய்தி நிறுவனம் மேலும் அறிவித்தது. அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால்
சீனாவுக்குத் திருப்பயணம் மேற்கொள்வதற்கு மிகுந்த ஆவலாய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.