சூடான் நாடுகளின் வன்முறைகள் குறித்து ஆயர் பேரவை கவலை
நவ.08,2011. சூடானிலும், புதிய நாடாக உருவாகியுள்ள தென்சூடானிலும் பரவி வரும் வன்முறைகள்,
அனைத்துலகச் சமூகத்தின் தலையீடு இல்லையெனில் உள்நாட்டுப்போராக வெடிக்கும் அபாயம் இருப்பதாக
சூடான் ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர். மக்களின் நியாயமான ஏக்கங்கள் செவிமடுக்கப்படவில்லையெனில்,
மோதல்கள் உருவாவது தடுக்க முடியாததாகிவிடும் என ஏற்கனவே தாங்கள் எச்சரித்துள்ளதாகக் கூறும்
சூடான் ஆயர் பேரவை, சூடானும் தென்சூடானும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி, அதன் மூலம்
மோதல்களை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே காணக்கிடப்பதாகக் கவலையை வெளியிட்டுள்ளது. இரு
சூடான் நாடுகளும் குடியரசு முறையில் வெளிப்படையான ஆட்சியை நடத்தவேண்டும் என விண்ணப்பித்துள்ள
ஆயர்கள், இரு நாடுகளின் எல்லையில் குடிபெயர்ந்தவர்களாக வாழும் ஏறத்தாழ இரண்டு இலட்சம்
மக்களின் வாழ்வை மேம்படுத்தும் மனிதாபிமான வழிகள் திறக்கப்படவேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.