2011-11-07 15:56:08

மீண்டுமொரு இத்தாலிய நகரிலிருந்து திருத்தந்தைக்கு கௌரவ குடியுரிமை


நவ.07,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு கௌரவ குடியுரிமையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது அவரின் தாய்வழி பாட்டியின் பிறப்பிட நகர் Naz-Sciaves.
திருத்தந்தையின் பாட்டி பிறந்த ஊர் அமைந்துள்ள இத்தாலியின் Alto Adige பகுதி மக்கள், இப்புதனன்று உரோம் நகர் வந்து திருத்தந்தையிடம் கௌரவக் குடியுரிமை சான்றிதழை வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் தாய்வழி மூதாதையர் பிறந்த இத்தாலியின் ராஸா என்ற கிராமத்திலிருந்து 5 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள Bressanone நகர் 2008ம் ஆண்டிலேயே திருத்தந்தைக்கு கௌரவ குடியுரிமையை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.