மீண்டுமொரு இத்தாலிய நகரிலிருந்து திருத்தந்தைக்கு கௌரவ குடியுரிமை
நவ.07,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு கௌரவ குடியுரிமையை வழங்க உள்ளதாக
அறிவித்துள்ளது அவரின் தாய்வழி பாட்டியின் பிறப்பிட நகர் Naz-Sciaves. திருத்தந்தையின்
பாட்டி பிறந்த ஊர் அமைந்துள்ள இத்தாலியின் Alto Adige பகுதி மக்கள், இப்புதனன்று உரோம்
நகர் வந்து திருத்தந்தையிடம் கௌரவக் குடியுரிமை சான்றிதழை வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தந்தையின்
தாய்வழி மூதாதையர் பிறந்த இத்தாலியின் ராஸா என்ற கிராமத்திலிருந்து 5 கிலோமீட்டர்கள்
தொலைவிலுள்ள Bressanone நகர் 2008ம் ஆண்டிலேயே திருத்தந்தைக்கு கௌரவ குடியுரிமையை வழங்கியுள்ளது
குறிப்பிடத்தக்கது.