இந்திய பல்சமயத் தலைவர்களுடன் திருப்பீட அதிகாரிகளின் கூட்டம்
நவ.07,2011. திருத்தந்தையின் அண்மை அசிசி பல்சமய கூட்டம் ஏற்படுத்தியுள்ள நல்விளைவுகள்
குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் இந்தியாவில் பயணம் மேற்கொண்டு வருகிறார் கர்தினால்
Jean-Louis Tauran. மதங்களிடையே கருத்துப் பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் திருப்பீட
அவையின் செயலர் பேராயர் Pierluigi Celataவுடன் இந்தியாவில் பயணத்தை மேற்கொண்டுள்ள இவ்வவையின்
தலைவர் கர்தினால் தவ்ரான், இத்திங்கள் முதல் வியாழன் வரை பூனாவில் இந்து சமயத்தவருடன்
கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறார். இம்மாதம் 11 மற்றும் 12 தேதிகளில் சீக்கிய
தலைவர்களுடன் அமிர்தசரஸிலும், 13ம் தேதி டெல்லியில் சமண மதத்தவருடனும் பேச்சுவார்த்தைகளில்
ஈடுபடும் கர்தினால் தவ்ரான் மற்றும் பேராயர் செலாத்தா, இந்திய இஸ்லாமியர்களுடனும் கலந்துரையாடல்களில்
ஈடுபடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.