கொலம்பியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன
நவ.05,2011. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து
இடம் பெற்று வருவதாக, அந்நாட்டு ஆயர் பேரவையின் நலப்பணி ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த
நவம்பர் மாத இதழில் இத்தகவலை வெளியிட்டுள்ள அந்த ஆணையம், 2006க்கும் 2009க்கும் இடைப்பட்ட
காலத்தில் 3,540 புகார்கள் பெண்களிடமிருந்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளது. நவம்பர்
25ம் தேதி, அனைத்துலக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் என்பதையும், இந்தச் சர்வதேச
நாள், 30 ஆண்டுகளுக்கு முன்னர் கொலம்பியாவின் பொகோட்டாவில் நடைபெற்ற முதல் இலத்தீன் அமெரிக்க
மற்றும் கரீபியன் பெண்ணுரிமை கூட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது என்பதையும் அவ்வாணையம் சுட்டிக்
காட்டியுள்ளது. கொலம்பியா போன்ற பல நாடுகளில் பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் இருந்த
போதிலும், அச்சட்டம் உண்மையிலேயே செயல் வடிவம் பெறுவதற்கு நீண்ட பயணம் செய்ய வேண்டியிருக்கின்றது
என்றும் அவ்வாணைய அறிக்கை கூறுகிறது.