2011-11-04 15:37:23

பொலிவியாவில் மனித வியாபாரம் அதிகரிப்பு


நவ.04,2011. தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் Sucre ல் மூன்று மாதங்களில் மட்டும் 75 சிறார் காணாமற் போயுள்ளனர், இவர்களில் 38 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டுக் குற்றத் தடுப்பு அலுவலகம் அறிவித்தது.
அந்நாட்டில் காணாமற் போகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இதற்கு மனித வியாபாரம் காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
சிறார் மிக எளிதாக நகரங்களுக்குக் கடத்தப்பட்டு அங்கிருந்து வேறு நாடுகளுக்கு வியாபாரம் செய்யப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.